திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் நமது கோட்டத்தின் சார்பாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்துத் தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...,
Sunday, January 29, 2017
Thursday, January 12, 2017
பொங்கல் திருவிழா....
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் தலைமை அஞ்சல் அதிகாரி தலைமையில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்
அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..,
Tuesday, January 10, 2017
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
நமது கோரிக்கையை ஏற்று பொங்கல் விடுமுறையைக் கட்டாய விடுமுறையாக மாற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டாய விடுமுறையில் இருந்த Additional Day for Dusseraவானது RH விடுமுறையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆகவே, நாளை நடைபெற இருந்த பொங்கல் விடுமுறைக்கான ஆர்ப்பாட்டம் இரத்து செய்யப்படுகிறது.
Friday, January 6, 2017
Thursday, January 5, 2017
Strike Postponed to 16th March 2017
Wednesday, January 4, 2017
மாபெறும் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்,
(P3 - P4 - GDS)
மயிலாடுதுறை கோட்டம், மயிலாடுதுறை – 609 001
தோழமைக்குரியோர்களே, வணக்கம்!
மாபெரும் ஆர்ப்பாட்டம்
இடம்: மயிலாடுதுறை H.O நாள்: 05.01.2017 நேரம்: மாலை 6 மணி
7-வது ஊதியக்குழு அமுல்படுத்திய போது HRA, CCA மற்றும் அடிப்படை ஊதிய மாற்றம், ஊதியக் கணக்கீடு (Fitment Formula) மாற்றம் இவை பற்றி பரிசீலித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட கமிட்டிகள் 6 மாத காலம் ஆன பிறகும் எந்தவித முடிவையும் மத்திய அரசுக்கு அளித்திடவில்லை. எனவே 11.07.2016 முதல் நடைபெற இருந்த ஒத்திவைக்கப்பட்ட வேலை நிறுத்தம் எதிர்வரும் 15.02.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தமாக மத்திய அரசு ஊழியர்களால் நடத்தப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக 05.01.2017 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறை HO முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து பகுதி தோழர்கள் மற்றும் தோழியர்கள் கலந்து கொண்டு, நிர்வாகத்திற்கு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் காண்பிப்போம்.
அணிதிரண்டு வாரீர்!ஆர்ப்பரித்து வாரீர்!!
தோழமையுடன்
V. மோகன் குமார் செயலர் P3
R.அமிர்தலிங்கம் செயலர் P4
A. சங்கர் செயலர் GDS (NFPE)
Monday, January 2, 2017
HAPPY NEW YEAR.......
இருக்கும் சந்தோசங்கள் நிலைக்கவும் , இழந்த சந்தோசங்கள் கிடைக்கவும் , செயும் முயற்சிகள் வெற்றி பெறவும் ,
உடலும் உள்ளமும் ஆரோக்யத்துடன் இருக்கவும்...
இப்புத்தாண்டு உங்களுக்கு புத்துணர்வூட்டும் ஆண்டாக அமையவும்...
எங்களின் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.......