ஊழியர் நலன் என்பது வெற்று கோஷமல்ல. உயிர் மூச்சு

Wednesday, May 31, 2017

திருமண வரவேற்பு விழா

ஆக்கூர் துணை அஞ்சலகத்தில் தபால்காரராக பணியாற்றும் நமது P4  சங்க தோழர் K. ராஜமுருகன் அவர்களின் திருமண வரவேற்பு விழா  மிகச் சிறப்பாக ஆக்கூரில் நடைபெற்றது.... மணமக்களுக்கு நமது அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறோம்.....

Monday, May 22, 2017

சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு

நமது கோட்டத்தில் சீர்காழி கிளை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு சீரும் சிறப்புமாக நேற்று (21.05.2017) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில் அஞ்சல் நான்கின் தமிழ் மாநில செயலர் மரியாதைக்குரிய தோழர் G. கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். மாநாட்டில் சீர்காழி கிளைத் தலைவராக தோழர் மனோகரன் அவர்களும் செயலராக தோழர் ராஜேந்திரன் அவர்களும் பொருளராக தோழர் சரவணக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அனைத்துப் புதிய பொறுப்பாளர்களுக்கும் மயிலாடுதுறை அஞ்சல் மூன்றின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...

Thursday, May 11, 2017

அவசரப் பொதுக்குழு கூட்டம்

நாள்: 16.05.2017 நேரம்: மாலை 6 மணி
இடம்: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம்

Monday, May 1, 2017

மே தின கொடியேற்று விழா..... உழைக்கின்றவர்க்கே உலகம் சொந்தம்.... வாழாமல் உழைத்து உழைக்காமல் வாழ்பவர்க்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியே உலகம் உனக்கே சொந்தம்...

மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் சங்க கொடியேற்றுவிழா சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவிற்கு அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் G.ஊமதுரை அவர்கள் தலைமை தாங்கினார்.
சங்ககொடியை கோட்ட உதவி தலைவர் தோழர் N. இலங்கோவன் அவர்கள் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் நமது சங்க்கத்தின் முன்னால் மாநில உதவி செயலர் மதிப்பிற்குரிய மூத்தத் தோழர் மருதுசாமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.