A letter has been sent to our beloved and respected com. R.N. Parashar regarding payment of commission for SGB.......
Tuesday, April 25, 2017
சனிக்கிழமை விடுமுறை வேண்டி....
பெரும்பாலான மத்திய அரசு துறைகளுக்கு வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அஞ்சல் துறையிலும் Administration பகுதியில் உள்ளவர்களுக்கும் வாரம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இன்று வங்கிகளும் 2,4 சனிக்கிழமையை விடுமுறை நாளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. இன்சூரன்ஸ் துறையான LICம் இவ்வாறே உள்ளது. ஆனால் அஞ்சல் துறையின் operative பகுதியில் வேலை செய்பவர்களுக்கு வாரம் ஆறு நாட்கள் வேலை நாட்கள். அப்படிப் பார்த்தால் வருடம் 365 நாட்களில் தோராயமாக 17 விடுமுறை நாட்கள், 52 ஞாயிறு விடுமுறை (17ல் சில ஞாயிறிலும் வரும்) சேர்த்து 69 நாட்கள் போக 296 நாட்கள் வேலை நாட்களாக உள்ளது. மற்றவர்களுக்கு 244 நாட்களே வேலை நாட்கள். 52 நாட்கள் அதிகம் வேலை செய்யும் நமக்கு அதற்குரிய ஈட்டிய விடுப்போ அல்லது சனிக்கிழமை விடுமுறையோ வழங்கப்படுமானால் அது நம் அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி செய்தியாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என நம் NFPE P3 அகில இந்தியப் பொதுச் செயலாளார் நம் துறை secretaryக்கு கடிதம் எழுதியுள்ளதன் செய்தி பின்வருமாறு:
Ref: PF/GENL/NFPE Dated – 11.02.2016
To
The Secretary
Department of Posts
Dak Bhawan, New Delhi – 110001
Sub: - Provision of five days week – request consideration.
Madam,
The Postal operative staff are in great pressure and heavy strain in the work after the implementation of ongoing CBS, CIS etc. Two days rest in a week will motivate them better work performance.
Already, five day weak is in vogue in respect of Postal administrative offices and Postal accounts. Only the operative offices are kept open for six days in a week.
Recently, the bank employees have been observed five day weeks in the second and fourth week of the month. This is being introduced in the insurance public sector companies like LIC.
It is therefore requested to kindly consider to observe five days week in the Postal operative officers.
Soliciting favourable response
Yours faithfully,
(R. N. Parashar)
Secretary General
ஏறக்குறைய ஒருவருடத்திற்கு மேலாகியும் அது குறித்தான மேற்கொண்ட செய்தி எதுவும் கிடைக்கப்பெறாமல் இருக்கிறது. அது குறித்து மேற்கொண்டு முயற்சிகள் எடுத்து
வெற்றிப் பெற்று ஒரு மகத்தான சாதனையை நமது சங்கம் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வி. மோகன் குமார் ,
கோட்ட செயலர்,
அஞ்சல் மூன்று ( NFPE)
மயிலாடுதுறை கோட்டம்
அவசரப் பொதுக்குழு....
அனைத்துப் பகுதி தோழர்கள் மற்றும் தோழியர்கள் அவசியம் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்....
நாள்: 29.04.2017
இடம்: மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம்
நேரம்: மாலை 6 மணி
Monday, April 10, 2017
நமது கோட்ட அஞ்சல் மூன்றின் உதவி செயலர் தோழர் பாலமுருகன் அவர்களின் தங்கை திருமண விழா 09.04.2017 அன்று திருவாரூரில் சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவில் நமது கோட்ட சங்கத்தின் சார்பாக தலைவர் தோழர் ஊமதுரை, செயற்குழு உறுப்பினர் தோழர் ஆனந்தராஜா மற்றும் தோழர் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.